
முதல் முறையாக பன்றியின் கல்லீரலை மனிதனுக்கு மாற்று அறுவை சிகிச்சை!
சீனாவில் உள்ள மருத்துவர்கள் புதன்கிழமை (மார்ச் 26) முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் கல்லீரலை மூளைச்சாவு அடைந்த மனிதனுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறினர். இடமாற்றம் செய்யப்பட்ட கல்லீரல் சோதனையின் நேரம் முழுவதும் சரியாக செயல்பட்டது, நிராகரிப்புக்கான எந்த அறிகுறிகளும் இல்லை.
ஆறு திருத்தப்பட்ட மரபணுக்களைக் (six edited genes) கொண்ட ஒரு சிறிய பன்றியின் கல்லீரல், மூளைச் சாவு அடைந்த ஒருவருக்கு மாற்றம் செய்யப்பட்டது, அவருடைய பெயர் மற்றும் அடையாளம் வெளியிடப்படவில்லை. கல்லீரல் தானம் செய்வதற்கான தேவை ஏற்கனவே மிக அதிகமாகவும், உலகம் முழுவதும் தொடர்ந்து தேவை வளர்ந்து வருவதாலும், இந்த முன்னேற்றம் எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் நம்பிக்கையை எழுப்பியுள்ளது. அவசரமாக உறுப்பு தேவைப்படுபவர்களுக்கும், நீண்ட காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கும் மரபணு திருத்தப்பட்ட பன்றிக...