
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக, நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மார்ச் 24, 25 தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இதில் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேலைநிறுத்த அறிவிப்பின் காரணமாக, வங்கிகள் நான்கு நாள்களுக்கு இயங்காமல் இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்காது. மார்ச் 22 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால், மார்ச் 23 (ஞாயிறு) விடுமுறையாக இருக்கும்.
மார்ச் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் உள்ளதால், நான்கு நாட்கள் (மார்ச் 22 – 25) வங்கிகள் செயல்படாது.
இதனால் வாடிக்கையாளர்கள் தேவையான பணவரிவர்த்தனைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.