
பல காலமாக நடக்கும் அடக்குமுறையை காரணம் காட்டி, பலூச் தலைவர் “மிர் யார் பலூச்” பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதாக அறிவித்தார். இந்தியா மற்றும் உலக சக்திகளின் ஆதரவையும் வலியுறுத்துகிறார், மேலும் பலூசிஸ்தான் மீதான பாகிஸ்தானின் உரிமைகோரலை நிராகரிக்கிறார்.
X இல் ஒரு பதிவில், பலுசிஸ்தான் மக்கள் தங்கள் “தேசிய தீர்ப்பை” வழங்கியுள்ளனர் என்றும், உலகம் இனி அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தானில், கடந்த பல ஆண்டுகளாக தனிநாட்டு அந்தஸ்துக்காக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பகுதியின் மக்கள்மீது பாகிஸ்தான் ராணுவம் கண்மூடிய அட்டூழியங்களை நடத்தி வருவது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமைகள் மீறல், பொதுமக்கள் திடீரென மாயமாகுதல், அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களின் ஒடுக்குமுறை மற்றும் கொடூர கொலைகள் போன்றவை அங்கு நாள் ஒரு சாதாரண நிகழ்வாக மாறியுள்ளன.
இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக, ‘பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்’ எனும் கிளர்ச்சிப் படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை நேரடியாக தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் தடுமாறி வருகிறது. மேலும், பலுசிஸ்தானில் உள்ள பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அரசு அலுவலகங்களில் பலுசிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்.
ந்நிலையில், பலுசிஸ்தான் மக்களின் பிரதிநிதியாக கருதப்படும் மிர் யார் பலோச், சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள செய்திகளில்:
- “பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பலுசிஸ்தானில் மக்கள் தெருவுக்கு இறங்கி போராடி வருகின்றனர். இது ஒரு விடுதலைப் போர். இனிமேல் பலுசிஸ்தான் பாகிஸ்தானின் பகுதியாக இருக்க முடியாது.”
- “இந்திய தேசபக்தி கொண்ட ஊடகங்கள், யூடியூபர்கள் மற்றும் மக்கள், பலுசிஸ்தான் மக்களை பாகிஸ்தானியர்கள் என குறிப்பிட வேண்டாம். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல — நாங்கள் பலுசிஸ்தானியர்கள்.”
- “பாகிஸ்தானுக்குள் உள்ள பஞ்சாப் மக்களுக்கு எந்த இனப்படுகொலை அல்லது மாயம் எனும் துன்பங்களும் நேர்ந்ததில்லை. ஆனால் பலுசிஸ்தான் மக்களுக்கு இது நாள்தோறும் நடக்கிறது.”
- “ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என இந்தியா வலியுறுத்துவது நியாயமானது. பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் இருக்கிறது.”
- “பலுசிஸ்தான் விடுதலையை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். பாகிஸ்தான் கட்டுக்கதைகளை இனி யாரும் நம்ப வேண்டாம். பலுசிஸ்தான் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானில் இணைக்கப்பட்டது.”
அவர் குறிப்பிட்டதுபோல், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தும் செயல்கள், அங்கு ஏற்பட்டுவரும் உயிரிழப்புகளுக்கு பாகிஸ்தான் ராணுவமே முழு பொறுப்பும் ஏற்க வேண்டும் என்றார். மிர் யார் பலோச் வெளியிட்ட இந்தக் கருத்துக்கள், பாக். ராணுவத்தின் கொடுமைகள் குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, பலுசிஸ்தான் விடுதலைக்கான முயற்சிக்கு புதிய ஊக்கத்தை வழங்கியுள்ளன.