தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி.
தமிழகத்தில் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யும் நோக்கில், மின் வாரியத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
கோடைகால தேவைக்கு முன்னேற்பாடு:தமிழகத்தில் பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடைகால வெப்பம் அதிகரிக்கும். அந்த காலகட்டத்தில் ஏர் கண்டிஷனர், பம்ப் செட், தொழிற்சாலைகள் மற்றும் பிற உபயோகங்களால் மின்சார தேவை பல மடங்கு உயரும். குறிப்பாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த வித தடையும் இல்லாமல் பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் 2026 பிப்ரவரி 1 முதல் மே 15 வரை தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க மின் வாரியம் முன்வைத்த மனுவை ஆணையம் பரிசீலித்து அனுமதி அளித்துள்ளது.
ஒவ்வொரு மாதத்திற்கும் அனுமதிக்கப்பட்...









