மெத்தனாலை சுவாதித்த இந்திய வேதியியலாளர் இறந்த பரிதாபம்!
விசாகப்பட்டினம் அருகே உள்ள டெக்கான் ரெமிடிஸ் ஆலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி ஒரு ரசாயன மையவிலக்கு தொட்டியில் இருந்து கசிந்த மெத்தனால் மற்றும் மற்றொரு சேர்மத்தை சுவாசித்த பின்னர், 42 வயதான மூத்த வேதியியலாளர் 'எம். பாலி நாயுடு', மருத்துவமனையில் இறந்தார். முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது தெரியவந்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநில அரசின் தொழிற்சாலைகள் துணை ஆய்வாளர் கே. பரமேஸ்வர ராவ் கூறுகையில், கசிவு ஏற்பட்ட மையவிலக்கில் மெத்தனால் மற்றும் 2-அமினோ-5-குளோரோபிரிடின் இருந்ததாகவும், அதன் நீராவிகளை இறந்த போன நாயுடு சுவாசித்ததாகவும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
வேதியியலாளர் தூசி முகமூடியைத் தவிர வேறு எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் அணியவில்லை என்பதை ராவ் உறுதிப்படுத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் பெறப்படவில்லை, மேலும் முழு விசாரணை நடந்து வருகிறது. காவல்துறைய...









