தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை மழை நிலவரம் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டதாவது:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிகபட்சமாக தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் வல்லம், சென்னை மணலி புதுநகரில் தலா 9 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் வத்தலை அணைக்கட்டு பகுதிகளில் தலா 7 செ.மீ., சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகம் மற்றும் தென் மாவட்டங்கள் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால், பல இடங்களில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி மற்றும் கா...









