காந்தி — உலகம் முழுவதற்குமான சிந்தனையாளர் ரஷ்ய அதிபர் புதின், பதிவு செய்த உணர்ச்சிப் பதிவு.
23வது ஆண்டு இந்தியா–ரஷ்யா உச்சி மாநாட்டை முன்னிட்டு இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், டிசம்பர் 5, 2025 அன்று காலை ராஜ்காட் நினைவுத்தலத்திற்கு வருகை தந்து தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடம் முன் மரியாதை செலுத்தினார்.
உள்ளூரிலும், உலக அளவிலும் அமைதி மற்றும் அகிம்சையின் சின்னமாக போற்றப்படும் காந்தியை நினைவுகூர்ந்து, புதின் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர், பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது பெரும் மரியாதையும் நன்றியும் நிரம்பிய கையெழுத்து குறிப்பையும் பதிவு செய்தார்.
புதின் எதை எழுதினார்?மகாத்மா காந்தி — நவீன இந்தியாவின் முக்கிய நிறுவனர்களில் ஒருவர்; அதைவிடவும் உலகம் முழுவதற்குமான சிந்தனையாளர்” என்று புதின் தனது குறிப்பில் எழுதியுள்ளார். சுதந்திரம், இரக்கம், பிறருக்கான சேவை மற்றும் மனித கண்ணியம் பற்றிய காந்தியின் கொள்கைகள் கண்டங்கள் கடந்தும் உலக ...









