Sunday, June 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்தம்; எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் இருக்காது – ரஷ்யா உறுதி

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனுடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவுகாணும் முயற்சியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையிடியுள்ளார்.

சமீபத்தில் சவுதி அரேபியாவில் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 30 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை ரஷ்யா ஏற்றுக்கொண்டதாலும், அதை உடனடியாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று புதினுடனான இரு மணிநேர தொலைபேசி உரையாடலின் முடிவில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

அதன்படி, உக்ரைனின் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்த புதின் உறுதியளித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளும் தலா 175 போர் கைதிகளை பரிமாற்றம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. இதில், ரஷ்யா, தன்னிடம் இருக்கும் 23 பேரை நல்லெண்ண நடவடிக்கையாக உக்ரைனிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

முழுமையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, மத்திய கிழக்கில் உள்ள ஓர் நாட்டில் மேலதிக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.