Sunday, June 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

சிரியாவுக்கான பொருளாதார தடைகளை நீக்குகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் மீது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா விதித்திருந்த பொருளாதார தடைகளை நீக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான சிரியா, கடந்த 50 ஆண்டுகளாக ஆசாத் குடும்ப ஆட்சிக்குள் இருந்தது. இந்த ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டின் பேரில், 1979 முதல் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து வந்தது. பஷார் அல் ஆசாத் அதிபராக இருந்த காலத்தில் 2004 முதல் இந்தத் தடைகள் மேலும் கடுமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டு பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி தீவிரமடைந்தது. கிளர்ச்சியாளர்களுக்கு அகமது அல் ஷாரா தலைமை வகித்து, 2024 டிசம்பரில் சிரியா முழுவதையும் கைப்பற்றி, பஷார் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார். அதனைத் தொடர்ந்து அகமது அல் ஷாரா இடைக்கால அதிபராக பதவியேற்றார்.

நேற்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த போது, சவுதி அரேபியாவில் அகமது அல் ஷாராவை சந்தித்தார். இந்த சந்திப்பு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ஏற்பாட்டில் 33 நிமிடங்கள் நடைபெற்றது.

இதையடுத்து, டிரம்ப் தெரிவித்ததாவது:
“பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னாள் ஆட்சிக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை இப்போது நீக்குகிறேன். சிரியா புதிய தொடக்கத்திற்குத் தயாராக உள்ளது. அமைதி மற்றும் வளர்ச்சி நோக்கில் அது பயணிக்க வேண்டும்” என்றார்.