
பாகிஸ்தானியர் ஒருவருடனான திருமணத்தை மறைத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஜவான் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அந்த CRPF ஜவான், CRPF-இடமிருந்து திருமணத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற்றதாகக் கூறியுள்ளார்.
“CRPF இன் 41 பட்டாலியனைச் சேர்ந்த CT/GD முனீர் அகமது, பாகிஸ்தானிய நாட்டவருடனான தனது திருமணத்தை மறைத்து, விசாவின் காலாவதியானது தெரிந்தே அவரை தங்க வைத்ததற்காகவும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது நடவடிக்கைகள் சேவை நடத்தையை மீறுவதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டது,” என்று CRPF தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த முனீர் அகமதுவின் பணி நீக்கம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.