
“நாட்டிற்குள் ஒரு ஆபத்தான நோய்க்கிருமியை” கடத்த முயன்றதாகக் கூறி இரண்டு சீன நாட்டினர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக FBI இயக்குனர் காஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.
சீன நாட்டவர்களில் ஒருவர் யுன்கிங் ஜியான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக படேல் கூறினார். ஜியான் “‘ஃபுசாரியம் கிராமினேரம்’ (Fusarium graminearum) எனப்படும் ஆபத்தான பூஞ்சையை(Fungus) மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு கடத்தியதாகக் கூறப்படுகிறது. ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தியதாகவும், சீனாவில் இந்த நோய்க்கிருமியின் மீதான பணிக்காக சீன அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெற்றதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட இரண்டாவது நபரின் விவரங்களை வெளிப்படுத்திய படேல், ஜியான் – ஜுன்யோங் லியுவின் காதலன் என்று கூறினார். லியு பொய் சொன்னதாகவும், பின்னர் டெட்ராய்ட் பெருநகர விமான நிலையம் வழியாக அமெரிக்காவிற்கு ‘ஃபுசேரியம் கிராமினாரம்’ கடத்தியதாக ஒப்புக்கொண்டதாகவும் படேல் குற்றம் சாட்டினார். “இருவரும் சதித்திட்டம், அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்துதல், மற்றும் விசா மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர்” என்று படேல் தனது பதிவில் X இல் எழுதினார்.
இந்த வழக்கு குறித்த ஒரு அறிக்கையில், அமெரிக்க வழக்கறிஞர் கோர்கன், “இந்த சீன நாட்டினரின் செயல்கள் தேசிய பாதுகாப்பு கவலைகள் கொண்டவை. இந்த இரண்டு வெளிநாட்டினர் மீதும் ‘வேளாண் பயங்கரவாத ஆயுதம்’ என்று விவரிக்கப்படும் ஒரு பூஞ்சையை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அங்கு அவர்கள் தங்கள் திட்டத்தை மேலும் மேம்படுத்த மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தைப் பயன்படுத்த இருந்ததும் தெரிய வந்துள்ளது.”
ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியை (CCP) கடுமையாகக் கண்டித்து, படேல் கூறுகையில், “அமெரிக்க நிறுவனங்களில் ஊடுருவி, செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அனுப்ப CCP 24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்பதை நினைவூட்டுகிறது, இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்க உயிர்களையும் நமது பொருளாதாரத்தையும் கடுமையான ஆபத்தில் ஆழ்த்தும்.”
சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இடம் வழங்குவதாக டிரம்ப் நிர்வாகம் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தது. சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்வதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
இந்த கடத்தி வரப்பட்ட பூஞ்சை “தலை கருகல் நோய்” (head blight) எனப்படும் ஒரு நோயை ஏற்படுத்தும் என்று FBI இயக்குனர் வெளிப்படுத்தினார். தலை கருகல் நோய் என்பது கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றில் ஏற்படும் ஒரு நோயாகும், இது மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்று காஷ் படேல் கூறினார்.
