
உத்தரபிரதேசம் மற்றும் குஜராத்தில் முக்கிய பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்வதற்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார். நேற்று ஒரு உயர்மட்ட மெய்நிகர் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திரு சவுகான், முழு கொள்முதல் செயல்முறையும் வெளிப்படையானதாகவும், டிஜிட்டல் ரீதியாகவும், விவசாயிகளை மையமாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உண்மையான விவசாயிகள் மட்டுமே இந்த முயற்சியால் பயனடைய வேண்டும் என்றும், இடைத்தரகர்களால் ஏற்படும் எந்தவொரு சுரண்டலையும் தடுக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உத்தரவிட்டார். இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளிடமிருந்து உளுந்து மற்றும் துவரை முழுமையாக கொள்முதல் செய்வதற்கும், நிலக்கடலை, எள், நிலக்கடலை மற்றும் சோயாபீன் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கும் அமைச்சர் அனுமதி அளித்தார், இதன் மொத்த மதிப்பு 13 ஆயிரத்து 800 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வேளாண் அமைச்சகத்தின் கூற்றுப்படி, முழு கொள்முதல் செயல்முறையும் இ-சம்ரிதி மற்றும் இ-சம்யுக்தி போர்டல்கள் மூலம் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும், இதனால் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.