
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 26 நாட்கள் நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்ததையடுத்து, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர், “சோனம் சார் 26 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்திருப்பது எங்களுக்கு மிகுந்த நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. உங்கள் அபாரமான தைரியத்திற்கும் தியாக மனப்பான்மைக்கும் நன்றி. நாட்டின் மனசாட்சியை விழித்தெழச் செய்ய நீங்கள் உங்கள் உயிரையே பணயம் வைத்துள்ளீர்கள். உங்கள் உயிர் இந்த நாட்டிற்கு மிகவும் விலைமதிப்பற்றது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை, ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியின் அமைதிப் போராட்டம் தொடரும்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
