Monday, March 30பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கும், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டத்திற்கும் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிற்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் நிறைவடையும்; வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மறுநாள் மேற்கொள்ளப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9 ஆகும்.

மேற்கு வங்கத்தில், முதல் கட்டமாக 152 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் 6 ஆகும்; வேட்புமனுப் பரிசீலனை மறுநாள் நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 9-ஆம் தேதியாகும். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான அறிவிக்கை ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.